இன்றைய முக்கிய செய்திகள்

முழுமையான இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் இஸ்ரேல்! மக்களை உடனடியாக வெளியேற உத்தரவு

முழுமையான இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் இஸ்ரேல்! மக்களை உடனடியாக வெளியேற உத்தரவ

காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

முழுமையான இராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், இந்த அவசர உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள், காசா பகுதியில் அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க வேண்டுமெனில், காசாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் சல்லடை போட்டு தேடினால் மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால் அந்த முடிவுக்கு வந்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் குழுவை முற்றிலும் அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது. அதற்கு வசதியாக, காசாவில் வசிக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன் இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவுகள் எல்லாம், குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு செல்லுங்கள் என்று மட்டுமே இருந்தன.

இப்போது மொத்த காசாவில் வசிப்பவர்களும் வேறு இடம் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டு மொத்த இஸ்ரேல் ராணுவமும் காசாவில் களம் இறக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

காசாவை முழுவதுமாக இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது தான், பிணைக்கைதிகளை ஒப்படைக்கும் முடிவுக்கு ஹமாஸ் வரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன