இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் அதிபர் சபதம்!

ஹனியேவின் “கோழைத்தனமான” கொலைக்கு இஸ்ரேலை “வருத்த” செய்வதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் எச்சரித்துள்ளார்.
ஈரான் “தன் பிராந்திய ஒருமைப்பாடு, பெருமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும்” என்றும் கூறியுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ஹனியேவை “தைரியமான தலைவர்” என்று வர்ணித்தார்.
கத்தாரை தளமாகக் கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர், பெசெஷ்கியானின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தெஹ்ரானுக்கு வருகை தந்திருந்தார்.
ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியும் அவரது மரணத்திற்கு பழிவாங்குவது “தெஹ்ரானின் கடமை” என்று கூறுகிறார்,
தற்போது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.
(Visited 23 times, 1 visits today)