ஈரானின் அணுசக்தி திட்டம் : ஐ.நாவின் இயக்குநர் மரியானோ க்ரோஸி தவறாக பயன்படுத்துகிறாரா?

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவாதம் இன்று (02.06) கெய்ரோவில் இடம்பெற்றது. இதில் ஈரான், எகிப்து, ஐநா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ஈரான் தனது யுரேனிய செறிவூட்டப்பட்ட இருப்பை ஆயுத தரத்திற்கு அருகில் அதிகரித்து வருவதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவாதம் இடம்பெற்றுள்ளது.
வியன்னாவை தளமாகக் கொண்ட சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி, ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் IAEA இன் ஆளுநர் குழுவிற்கு தொடர்ந்து கவலை அளிப்பதால், நிறுவனம் இந்த அறிக்கையைத் தொகுத்ததாகக் கூறினார்.
“தெளிவுபடுத்தலை வழங்குவதன் மூலம் தெளிவுக்கான ஊக்கத்தையும், அமைதியான தீர்வுக்கான ஊக்கத்தையும், இராஜதந்திர தீர்வையும் வழங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை அடுத்த ஐ.நா. பொதுச்செயலாளராக வேண்டும் என்ற க்ரோசியின் நம்பிக்கையால் IAEA அறிக்கை அரசியல் ரீதியாக உந்துதல் பெற்றதாக ஈரானிய தலைமை நம்புகிறது.
இந்த அறிக்கையின் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல உறுப்பினர்களின் வாக்குகளை ஈர்க்க க்ரோசி முயற்சிக்கிறார் என்று ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.