ஈரானில் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – புதிய அறிக்கை வெளியீடு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மேற்கொண்டதிலிருந்து, ஈரானில் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 3,375 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்களும், 496 பேர் பெண்களும் அடங்குகின்றனர்.
மேலும், தெஹ்ரான், ஹோர்மோஸ்கான் மற்றும் இஸ்ஃபஹான் மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
அதில் ஒரு வயதிற்குட்பட்ட 7 குழந்தைகள், 1 முதல் 12 வயதுக்குட்பட்ட 255 குழந்தைகள் மற்றும் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட 121 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்களில் ஆப்கானிஸ்தான், சிரியா, துருக்கி, பாகிஸ்தான், சீனா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளின் பிரஜைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





