IPL Match 58 – மழை காரணமாக நாணய சுழற்சியில் தாமதம்

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8ஆம் தேதி டெல்லி- பஞ்சாப் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் ஒருவாரம் கழித்து இன்று போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- கேகேஆர் இடையிலான போட்டியுடன் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது.
ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 2ஆவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளது.
(Visited 1 times, 1 visits today)