இலங்கை

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் தொடர்ந்தும் 5 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேநேரம், கடந்த மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவல்லாப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!