ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக இணையம்; ‘ப்ளூ பேர்ட்’ திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அமெரிக்காவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ப்ளூ பேர்ட் 6’ (BlueBird 6) ஐ ‘பாகுபலி’ LVM3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 8:55 மணிக்கு விண்ணில் பாய்ந்த இந்த ராக்கெட், சுமார் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் சுமந்து சென்றது.
இதுவே இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். பூமியில் இருந்து 520 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், எந்தவித கூடுதல் உபகரணங்களும் இன்றி சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கு விண்வெளியிலிருந்து நேரடியாக அதிவேக இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டது.
இந்த வெற்றிகரமான ஏவுதல் குறித்துப் பாராட்டுத் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வர்த்தக ரீதியான விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் ஆதிக்கத்தை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.





