இலங்கை

இறக்குமதி செய்யப்படும் மா மற்றும் சீனியின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா, மற்றும் சீனிக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மா, மற்றும் சீனிக்கான சுங்க வரி சலுகை நீக்கப்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல், அமுலாகும் வகையில்,   ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,  கோதுமை மாவுக்கு 3 ரூபாவால் சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் அதனை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதனை அடிப்படையாகக் கொண்டு மாவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது.

அத்தோடு தற்போது டொலரின் பெறுமதியும் குறைவடைந்துள்ளது. எனவே கோதுமை மா விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலையும் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!