இலங்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் மொத்தக் கட்டணங்கள் 3% குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான கட்டண திருத்தங்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் 30 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் வசூலிக்கப்படும் கட்டணம் 26.9% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 31-60க்கு இடைப்பட்ட யூனிட்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் 10.8% ஆகவும், 31-60 யூனிட்டுகளுக்கு கட்டணம் 7.2% ஆகவும், 91-180க்கான கட்டணம் 3.4% ஆகவும் குறைக்கப்படும்.

மேலும், 180 யூனிட்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு யூனிட் மின்சார கட்டணம் 1.3% குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் 3.2% குறைக்கப்பட உள்ளதாகவும், தொழிற்சாலைகள், பொதுப் பிரிவுகள், தெருவிளக்குகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்