இலங்கை செய்தி

கம்பளையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.

கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த சந்திப்புகளின் போது, ​ இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் மீள்தன்மை கொண்டவொரு எதிர்காலத்தை உருவாக்க உதவுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!