ஈரான் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்டும் IMF!
மத்திய கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர் (63.7 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) வரை உடனடி நிதியுதவி வழங்க வேண்டியிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர், வாஷிங்டனில் IMF மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் வருடாந்திர வசந்தகாலக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மத்திய கிழக்கு போரின் தொடர் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, குறுகிய காலத்தில் 20 பில்லியன் முதல் 50 பில்லியன் வரை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
போரினால் ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளால் உண்டாகும் உணவுப் பாதுகாப்பின்மை, குறைந்தது 45 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.





