பொழுதுபோக்கு

போர் தொழில் படத்திற்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ இவ்வளவா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ’போர் தொழில்’ .

இத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றதால் அதிக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

சுமார் ரூ 6 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூபாய் 28 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.

இதில் பொலிஸ் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளதுடன் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் போர் தொழில் படத்திற்காக அசோக் செல்வன் ரூபாய் 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்