இலங்கை செய்தி

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்தவர்கள் மீது CID விசாரணை நடத்த வேண்டும் – காஞ்சனா

  • April 12, 2023
  • 0 Comments

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொலன்னாவ முனையத்தில் எரிபொருள் விநியோகத்திற்கு CPC மற்றும் CPSTL ஊழியர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் CID ஊடாக விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். CPC மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிறுவனங்களின் ஊழியர்கள் குழுவொன்று மார்ச் 28 ஆம் திகதி நண்பகல் எரிபொருள் விநியோக பகுதிக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் […]

இலங்கை செய்தி

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 28 சீன பிரஜைகள் இலங்கை பொலிசாரால் கைது

  • April 12, 2023
  • 0 Comments

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 28 சீன பிரஜைகளை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களில் ஐந்து சீன பெண்களும் அடங்குவர். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் ஐந்து மடிக்கணினிகள் மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. மோசடி கும்பல் பற்றி INTERPOL ஆல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி, அளுத்கமவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபர்களை கைது செய்தனர். சந்தேகநபர்கள், சீனாவில் இருந்தபோது, இரண்டு மாதங்களுக்கும் […]

இலங்கை செய்தி

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்து – ரணில்!

  • April 12, 2023
  • 0 Comments

  இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த போட்டியில்  பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும் எனத் தெரிவித்த அவர், வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வல்லரசுகளுக்கிடையிலான போட்டி நிலைமை உலகில் எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமையை தோற்விக்குமெனத் தெரியாது. எனவே எதிர்காலத்தில் எமது தடைப்படைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். இதனைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு 2023 என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் […]

இலங்கை செய்தி

கணனி குற்றங்கள் தொடர்பில் 27 பேர் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

கணனி குற்றங்கள் தொடர்பான இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 677 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக வெளிநாட்டவர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தள குற்றங்கள் குறித்து 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 25 வெளிநாட்டவர்கள் உட்பட 263 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 14 […]

இலங்கை செய்தி

பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் மஹிந்தவை சந்தித்து பேச்சு

  • April 12, 2023
  • 0 Comments

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் சனிக்கிழமை (01) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு, நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவித்த 4 தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட 20 பேர், கடந்த 29ஆம் திகதி கட்டாய […]

இலங்கை செய்தி

10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் தேர்தல் – ஆணைக்குழு

  • April 12, 2023
  • 0 Comments

10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எது எவ்வாறாயினும் தற்போது தேர்தலை இரத்து செய்வது குறித்த முடிவு எட்டப்படவில்லை என்றும் 10 […]

இலங்கை செய்தி

இலங்கைக்கான கப்பல்சேவை தொடர்பில் தமிழக பொதுப்பணிதுறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

இம்மாத இறுதியில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும்  இடையே  குறைந்ததூர பயணிகள் கப்பல் போக்குவரத்து கப்பற்சேவை ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே குறைந்ததூர பயணிகள்  கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு சட்டமன்றில் இன்று தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை – தமிழ்நாடு பயணிகள் கப்பல்சேவை கப்பல்சேவை ஆரம்பிக்கப்பட்டால் இரு நடுகளிற்கு இடையில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு இதனூடாக பல்வேறு வரப்பிரசாதங்கள் கிடைக்கும் என்பதுடன், இலங்கை […]

இலங்கை செய்தி

இலங்கையின் தங்கத்தின் நிலைவரம்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது. இதன்படி  24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 177,000 வரையில் விற்பனையாகி வருகின்றது. மேலும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 162, 750 ரூபா  வரையில் விற்பனையாகி வருகின்றது. இதேவேளை நேற்றையதினம் ஒரு பவுண் விலை 165, 600 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180, 000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்  அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 50.6 சதவீதமாக  ஆக பதிவாகியிருந்தது. மேலும் மார்ச் மாதத்தில் 54.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 47.6 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

பதுளையில் வாகன கண்காட்சியில் விபத்து – இரு மாணவர்கள் பலி!

  • April 12, 2023
  • 0 Comments

பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை கிரிக்கட் போட்டியின்  போது, ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 7 மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

error: Content is protected !!