ஆசியா

அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்த தயாராகும் வடகொரியா

  • July 11, 2023
  • 0 Comments

வடகொரியாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்தப் போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் பியோங்யாங் (Pyongyang) வட்டாரத்தில் அமெரிக்கா, ராணுவப் பதற்றங்களைத் தூண்டுவதாக குறிப்பிடப்படுகின்றது. அதனால், அணுவாயுதப் பூசல் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. கொரியத் தீபகற்பத்திற்கு அருகே உள்ள நீர்ப்பகுதிக்கு நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பும் அமெரிக்காவின் முடிவுக்கும் வட கொரியா கண்டனம் தெரிவித்தது. அணுச்சக்தியால் இயங்கும் USS Michigan கப்பல் புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சக்கூடியது. அது கடந்த மாதம் தென் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புகலிடம் கோரியுள்ள லட்ச கணக்கான மக்கள்

  • July 11, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் 2022 ஆம் ஆண்டு 2.4 லட்சம் மக்கள் புகலிடக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள். கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் மொத்தமாக 1 மில்லியன் மக்கள் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது ஐரோப்பாவினுடைய அகதிகளுக்கான முகாம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்த புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 லட்சத்து 96 ஆயிரம் பேர் இவ்வாறு 27 நாடுகளில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் […]

ஐரோப்பா

பாரிஸில் நகை வாங்க சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • July 11, 2023
  • 0 Comments

பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளது. 370,000 யூரோக்கள் பெறுமதியான நகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. நகைகளை விற்பனை செய்ய முற்பட்டவேளையில் அவை திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் avenue Kelber வீதியில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் வைத்து 80 வயதுடைய பெண்மணி ஒருவர் தனது நகைகளை விற்பனை செய்வதற்காக ஏற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் குறித்த நகைகளை வாங்குவதற்காக இரு நபர்கள் அழைக்கப்படிருந்தனர். […]

ஆசியா

சிங்கப்பூரில் ஊழியர் ஒரு பரிதாபமாக உயிரிழப்பு – விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதம்

  • July 11, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறிய நிறுவனம் ஒன்றுக்கு 200,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின்கீழ் கடந்த ஜூன் 28 ஆம் திகதி அன்று அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் நடந்த வேலையிட விபத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். ஏனெனில், அங்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து வைடிஎல் கான்கிரீட் நிறுவனத்தின் செயல்பாட்டு […]

உலகம்

வடக்கு கரீபியன் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • July 11, 2023
  • 0 Comments

வடக்கு கரீபியன் அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ஆறு மைல் கிலோமீட்டர் ஆழத்தில், ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு வடகிழக்கே சுமார் 170 மைல் (270 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் இதன் தாக்கம் புவேர்ட்டோ ரிக்கோ உட்பட பல தீவுகளில் உணரப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட […]

உலகம்

அமெரிக்காவில் சமூகவலைத்தளங்கள் முடங்கின!

  • July 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள பல பயனர்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் சில மணித்தியாலங்கள் முடங்கியுள்ளன. Downdetector.com  இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  13,000 பயனர்கள் Instagram அணுகுவதில் சிக்கல்களைப் முறைப்பாடு அளித்துள்ளனர். அதே நேரத்தில் சுமார் 5,400 பயனர்கள் Facebook இயங்கவில்லை எனவும், 1,870  WhatsApp இயங்கவில்லை எனவும் முறைப்பாடு அளித்துள்ளனர். டவுன்டெக்டர் அதன் இயங்குதளத்தில் பயனர் சமர்ப்பித்த பிழைகள் உட்பட பல ஆதாரங்களின் நிலை அறிக்கைகளை தொகுத்து செயலிழப்பைக் கண்காணித்துள்ளது. […]

இலங்கை

கொழும்பில் முக்கியமான அடுத்த இரண்டு வாரங்கள்!

  • July 11, 2023
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார். டெங்கு நோய்க்கு எதிரான போராட்டத்திலேயே அடுத்த இரண்டு முக்கியமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநகரசபை எல்லைக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக வைத்தியர் விஜயமுனி தெரிவித்தார். பருவமழை தொடங்குவதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றார். டெங்கு பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும், […]

உலகம் செய்தி

வெறும் ஐந்து நாட்களில், 100 மில்லியன் பயனர்கள் த்ரெட்ஸில் இணைவு

  • July 10, 2023
  • 0 Comments

வெறும் ஐந்து நாட்களில், 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மெட்டாவின் ‘ட்விட்டர் கில்லர்’ ஆப் த்ரெட்ஸில் இணைந்துள்ளனர், இது மைல்கல்லை எட்டுவதற்கு வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் தளமாக மாறியுள்ளது. மேலும், 100 மில்லியனை எட்டுவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்த Open AI இன் ChatGPT சாதனையையும் த்ரெட்ஸ் முறியடித்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிலிருந்து தரவைக் கண்காணிக்கும் Quiver Quantitative இன் தரவுகளின்படி, திங்கள்கிழமை தொடக்கத்தில், புதன்கிழமை மாலை 100 நாடுகளில் தொடங்கப்பட்ட இந்த செயலி 100 மில்லியனுக்கும் […]

இலங்கை செய்தி

யாழ். மாவட்டத்தில் தனியார் கல்விநிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் இல்லை

  • July 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்விநிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை மறுத்து கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு […]

உலகம் செய்தி

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்

  • July 10, 2023
  • 0 Comments

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 10 அன்று இரவு 8:28 மணிக்கு (UTC) நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ட்வீட் செய்தது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏஜென்சி வெளியிடவில்லை.

error: Content is protected !!