இலங்கை

இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

  • July 14, 2023
  • 0 Comments

இலங்கையின் சுகாதார அமைப்பை பவீனப்படுத்துவதற்கு  காரணமான தரப்பினர் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்தும் தமது கட்சி கவனம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, புற்றுநோயாளிகளுக்கு தரம் குறைந்த சத்திரசிகிச்சை […]

இலங்கை

பாதாள உலகக்குழுக்கள் முற்றாக ஒழிக்கப்படும் – அனுர!

  • July 14, 2023
  • 0 Comments

தமது அரசாங்கத்தின் கீழ் பாதாள உலகக் குழுக்கள் முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் படையின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருளின் கோரப்பிடியில் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்ற கட்டுப்பாட்டுடன் செயல்படுவேன் என்றும் அவர் கூறினார். பாதாள உலக போதைப்பொருள் வியாபாரிகளுடன் மோதுவதற்கு தமது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் நியாயமாக அமுல்படுத்தப்படும் நாடுதான் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொருளாதாரச் சிக்கல் – செல்லப் பிராணிகளும் பாதிப்பு

  • July 14, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, செல்லப்பிராணிகளை பராமரிப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபைண்டர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், சுமார் 30 லட்சம் ஆஸ்திரேலியர்கள் தாங்கள் வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை தீவனத்தை கட்டுப்படுத்துவதும், கால்நடை மருத்துவ கட்டணம் மற்றும் பிற செலவுகளை குறைப்பதே இதன் நோக்கமாகும். கணிசமானோர் தங்கள் செல்லப்பிராணிகளை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதை வெகுவாகக் குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விலங்குகள் நல […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 9 மாத குழந்தைக்கு 17 வயதான தாய் செய்த கொடூரம்

  • July 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டார். தன்னைத் தூங்கவிடாமல் அழுதுகொண்டே இருந்த குழந்தைக்கே தாயார் இந்த கொடூர செயலை செய்துள்ளார். நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கு 9 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், குழந்தை அருந்திய பாலுடன் ஃபெண்ட்டானில் எனப்படும் மயக்க மருந்து அதிகளவு கலந்திருந்தது […]

இலங்கை

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் இன்று!

  • July 14, 2023
  • 0 Comments

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடாளுமன்றத்தை  ஜூலை 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. அப்போது, ​​சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன. மேலும், ஊழலுக்கு எதிரான மசோதா மற்றும் குற்றச் சட்டத்தின் பாதிக்கப்பட்டவர்கள் […]

இலங்கை

இந்தியா – இலங்கை இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பு

  • July 14, 2023
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனத்தின் யோசனைக்கு அமைய, இந்தியாவின் நாகப்பட்டினம் – திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நேற்று முன்தினம் மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் , பெட்ரோலிய கூட்டுத்தாபனம் , […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Ai தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

  • July 14, 2023
  • 0 Comments

உலகில் சுமார் 27% வேலைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் தானியங்கி மயமாக மாற்றப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. OECD எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. OECD என்பது 38 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இதில் பெரும்பாலும் செல்வந்த நாடுகளே இணைந்து இருக்கிறது. ஆனால் மெக்சிகோ மற்றும் எஸ்டோனியா போன்ற சில வளர்ந்து வரும் நாடுகளும் இதில் இருக்கிறது. இதுவரை ஏஐ தொழில்நுட்பத்தால் பிறருடைய வேலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது […]

இலங்கை

ONMAX DT திட்டத்தின் மூலம் பணமோசடி : 95 வங்கி கணக்குகள் முடக்கம்!

  • July 14, 2023
  • 0 Comments

ONMAX DT பிரமிட் திட்டத்தைச் சேர்ந்த 95 வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த  நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட ஆறு நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி  கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வங்கிக்கணக்குகளில் 790 மில்லியன் தொகை காணப்பட்டதாகவும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 95 கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிவேக இணைய சேவை – 6G வழங்க தயாராகும் அரசாங்கம்

  • July 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 6G தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளுக்ளு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்துக்கான இணையம்’ என தெரிவிக்கப்பட்டும் இந்த 6G இணைய வேகமானது 5G தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமாகும். பிரான்சில் சில 5G இணையம் வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய 6G இணையத்தினை வழங்க அரசு தயாராகி வருவதாக தொழிற்ல்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2030 ஆம் ஆண்டினை இலக்கு வைத்து இந்த […]

இலங்கை

ஆய்வக எலியாக மாறிய மக்கள் : பல உயிரிழப்புகள் பதிவாகும் என எச்சரிக்கை!

  • July 14, 2023
  • 0 Comments

கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் இலங்கைக்கு பதிவு செய்யப்படாத 785 வகையான மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யார் சிகிச்சை எடுத்தாலும் நோயாளிகள் பலர்  உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். புதிய மருந்துகளை ஆர்டர் செய்வதற்கு கால அவகாசம் எடுக்கும் எனத் தெரிவித்த அவர்,  அதுவரை இறக்குமதி செய்யப்பட்ட குறித்த மருந்துகளையே பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நோயாளிகள் பலர் உயிரிழக்க வேண்டிய துர்பாக்கிய […]

error: Content is protected !!