இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞர் – யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு?

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கையின் இளைஞர் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான் நிறுவனம் ஒன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் அண்மையில் அமைச்சரை சந்தித்துள்ளனர். இதன்போது, குறித்த கோரிக்கைக்கு, ஜப்பானிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்துள்ளதுடன், இலங்கையின் தொழில்நுட்ப திறனைப் பாராட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

கடும் வெப்பத்தால் திணறும் ஐரோப்பா! வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

  • July 22, 2023
  • 0 Comments

ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளில் வெப்ப அலை தாங்கா முடியாத நிலையை எட்டியுள்ளது. இதனால் உலக நாடுகள் தவித்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வீசிவரும் வெப்ப அலையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் குளிர்ச்சியாக இருக்க முயற்சிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு […]

இலங்கை

இலங்கையில் பலவேறு விடயங்களுடன் புதிய இறப்புச் சான்றிதழ்

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கையில் புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் தெரிவித்தார். 12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம், இயற்கை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவின் ஆபத்திற்கு மத்தியில் புதிய AI கருவியை சோதிக்கும் கூகுள்!

  • July 22, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவின் ஆபத்திற்கு மத்தியில் Genesis என்ற பெயர் கொண்ட Ai கருவியை கூகுள் நிறுவனம் சோதித்து வருகிறது. இந்த கருவியால், தற்போது என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தானாகவே கண்டறிந்து, செய்திக் கட்டுரையாக அதை எழுத முடியும். செய்திக் கட்டுரையை எழுத செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் கருவியை கூகுள் சோதித்து வருகிறது. இந்த கருவியால் எழுதப்பட்ட கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் போன்ற […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை!

  • July 22, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சுற்றுப்புற சூழல் ஆர்வாளர் அமைப்பான பிரைடே பியுசர் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது ஜெர்மன் அரசாங்கத்துடைய சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு திட்டமானது போதுமானது அல்ல என்று குற்றம் சாட்டி இருக்கின்றது. அதாவது ஜெர்மன் அரசாங்கமானது அதிவுக போக்குவரத்து பாதையில் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்பானது கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதாவது ஆக கூடியது மணிக்கு 120 […]

ஆசியா

சிங்கப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்திய தீவிபத்து!

  • July 22, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உள்ள Bedok Reservoir Road அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று அதிகாலை 03.40 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் தீ கொளுந்து விட்டு எரிந்ததைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக அங்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்

  • July 22, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 16 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பாலியல் பலாத்காரம் மற்றும் பலாத்கார முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதுடைய சிறுவன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஜூன் மாதம் வரை Seine-Saint-Denis நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த பலாத்கார சம்பவம் கடந்த இடம்பெற்றுள்ளது. Aubervilliers, La Courneuve, Dugny, Drancy, Le Pré Saint-Gervais, Romainville மற்றும் Rosny-sous-Bois […]

ஐரோப்பா

கைது செய்யப்படும் அச்சத்தில் புட்டின் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • July 22, 2023
  • 0 Comments

  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள BRICS உச்சநிலை மாநாட்டிற்கு நேரடியாகச் சென்று கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். அவருக்கு எதிராக அனைத்துலகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. உக்ரேனில் போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் புரிந்த சந்தேகத்தின்பேரில் அவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஓர் உறுப்பு நாடாகும். அதனால் ரஷ்ய அதிபர், தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றால் அங்கு அவர் தடுத்துவைக்கப்படலாம் […]

இலங்கை

இலங்கைக்கு மீண்டும் காத்திருக்கும் நெருக்கடி – எச்சரிக்கும் பேராசிரியர்

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கை மீண்டும் செப்டெம்பர் மாதம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெட்சில இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நிதி நிதியத்தின் 39 வீத பொருளாதார மீட்சி ஒப்பந்தங்கள் மே மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய போதிலும், அரசாங்கம் 10 வீதத்தையே நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு கொழும்பில் […]

இலங்கை செய்தி

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாதப் பட்டியலில்!

  • July 21, 2023
  • 0 Comments

மன்னாரமுது அஹ்னாப் என தமிழ் வாசக சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசிம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபராக இலங்கை அரசாங்கம் மேலும் பட்டியலிட்டுள்ளது. 2023 ஜூன் 8 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. “அவ்வப்போது திருத்தப்பட்டு ஓகஸ்ட் 1, 2022 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2291/02இல் வெளியிடப்பட்ட, 21 […]

error: Content is protected !!