இந்தியா இலங்கை உலகம் செய்தி

ஓன்டன்செட்ரான் ஊசி சர்ச்சை: சர்வதேச பரிசோதனைக்கான முழுச் செலவையும் ஏற்கத் தயார் – இந்திய நிறுவனம் அறிவிப்பு

  • December 21, 2025
  • 0 Comments

இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ‘ஓன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்துகளை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்கான முழுச் செலவையும் ஏற்கத் தயாராக இருப்பதாக இந்திய நிறுவனமான மான் பார்மாசூட்டிக்கல்ஸ் அறிவித்துள்ளது. இந்த மருந்தை ஏற்றிய பின்னர் இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, அதன் நான்கு தொகுதிகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குறித்த மருந்துகள் உரிய வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவது இலங்கை அதிகாரிகளின் பொறுப்பு […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

கரத்தா விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுகிறது: சிங்கப்பூர், பாலிக்கு நேரடிப் பயணம்

  • December 21, 2025
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவின் கரத்தா (Karratha) பிராந்திய விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான புதிய திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், பில்பாரா (Pilbara) பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களும், ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களும் இனி சிங்கப்பூர் மற்றும் பாலி போன்ற நாடுகளுக்கு நேரடியாகப் பயணிக்க முடியும். தற்போது, இப்பகுதியிலுள்ள மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல சுமார் 1,500 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பெர்த் (Perth) நகருக்குச் சென்றே விமானங்களைப் பிடிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இது […]

இலங்கை செய்தி

பெற்றோரின் உரிமைகளைப் பறிக்கும் கல்விச் சீர்திருத்தம்”: கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடும் எச்சரிக்கை

  • December 21, 2025
  • 0 Comments

“பாடசாலைப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், பெற்றோரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 6 வயது முதல் மாணவர்களுக்குப் போதிக்கப்படவுள்ள இந்த புதிய பாடத்திட்டம், மேற்கத்தைய நாடுகளின் கலாசாரச் சீரழிவுகளைத் திணிப்பதாகக் குற்றம் சாட்டினார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சில சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவிக்காக இலங்கையின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை […]

இலங்கை செய்தி

கண்டி மற்றும் நுவரெலியாவிற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: உடனடியாக வெளியேறுமாறு 8 பிரதேசங்களுக்கு உத்தரவு

  • December 21, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, மினிப்பே உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும் மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேவேளை, கடந்த சில நாட்களில் மண்சரிவு அபாயம் குறித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களைப் பரிசோதிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக தேசிய […]

இலங்கை செய்தி

நாளை முதல் யாழ்ப்பாணம் – அனுராதபுரம் இடையே மீண்டும் தொடருந்து சேவை ஆரம்பம்

  • December 21, 2025
  • 0 Comments

வடக்கு மார்க்கத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன. நாளை அதிகாலை 6.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் நோக்கிய முதலாவது சேவை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிய தொடருந்து நாளைய தினம் மாலை 2.30 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி துப்பாக்கிச் சூடு: உளவுத்துறை கட்டமைப்பை மாற்றியமைக்க ஆஸ்திரேலிய பிரதமர் அதிரடி உத்தரவு

  • December 21, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தேசிய உளவு மற்றும் பொலிஸ் முகமைகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உத்தரவிட்டுள்ளார். ஐஎஸ் (ISIS) சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தந்தை மற்றும் மகனால் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறிவருவதால், தீவிரவாதத்தை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்குப் கூடுதல் அதிகாரம் மற்றும் புதிய கட்டமைப்பு தேவையா என்பது குறித்து […]

உலகம் செய்தி

தாய்லாந்துடனான மோதல் : கம்போடியாவில் இருந்து வெளியேறிய அரை மில்லியன் மக்கள்!

  • December 21, 2025
  • 0 Comments

தாய்லாந்துடனான இரண்டு வார கால எல்லை மோதல் நிலைமை காரணமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புனோம் பென்னின் (Phnom Penh) உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. ​​தாய்லாந்தின் F-16 விமானங்களால் நடத்தப்படும் பீரங்கி குண்டு தாக்குதல், ரொக்கெட்டுகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் […]

உலகம் ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் – பிரித்தானியா இடையே இராஜதந்திரச் சந்திப்பு

  • December 21, 2025
  • 0 Comments

ஈரான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் இராஜதந்திர விரிசல்களுக்கு மத்தியில், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர் ஆகியோருக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக ஈரானிய அரசு ஊடகம் அறிவித்துள்ளது. பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் குறித்து பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகளைத் […]

இலங்கை செய்தி

வான் பாயும் 36 பிரதான குளங்கள்: நில்வலா ஆற்றின் நீர்மட்டமும் உயர்வு

  • December 21, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 36 பிரதான குளங்கள் உட்பட மொத்தம் 88 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருகின்றன. இது குறித்து கருத்து வெளியிட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார, நீர் வெளியேற்றத்தால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த […]

இலங்கை செய்தி

தையிட்டியில் பெரும் பதற்றம்: வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

  • December 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இன்று காலை கடும் பதற்றமான சூழல் நிலவியது. போராட்டத்தின் போது சிவில் சமூகச் செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஒருவர் உட்பட மொத்தம் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன்போது, அங்கு நின்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் […]

error: Content is protected !!