இலங்கை செய்தி

ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை

  • February 26, 2026
  • 0 Comments

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (27) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் […]

இலங்கை செய்தி

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – மட்டக்களப்பில் நாளை மறுதினம் மாபெரும் போராட்டம்

  • February 26, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார். இந்த போராட்டத்தை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நாளை மறுதினம் முன்னெடுக்கப்பட்ட தீர்மானித்துள்ளதாக கூறிய அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோரத்தை உணர்ந்தவர்களாக இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான […]

செய்தி

வவுனியா மாவட்ட கூட்டத்தில் தனிச்சிங்களம்: ரவிகரன் எம்.பி. கடும் சீற்றம்!

  • February 26, 2026
  • 0 Comments

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (26) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இதனால் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் […]

இந்தியா

மணமகள்மீது துப்பாக்கிச்சூடு: சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்!

  • February 26, 2026
  • 0 Comments

மணமேடையில் மணமகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள பயங்கர சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஹாரின் , பக்சார் மாவட்டத்தில் சவுசா நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி குமாரி. 18 வயதான இவருக்கும், உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனும், மணமகளும் மேடையில் இருக்கும்போது, மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த நபரொருவர், திடீரென ஆர்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். காயம் […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கும் ஸ்பெயினின் திட்டத்தில் சிக்கல்!

  • February 26, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் புலம்பெயர் குடியேற்றவாசிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குவதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடு சர்ச்சைகளை கொண்டுவந்துள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து ஜூன் வரை இந்த முயற்சி நடைபெறும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கூறியுள்ளது, ஆனால் விண்ணப்ப செயல்முறை அல்லது தேவையான ஆவணங்கள் குறித்து சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விண்ணப்பங்களுக்கு கூடுதல் பட்ஜெட் அல்லது பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை என்று இடம்பெயர்வு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடவடிக்கையானது  சட்டப்பூர்வமாக்கும் வாய்ப்பைப் […]

இலங்கை செய்தி

நாளை திருமலை வருகிறது “தரங்கிணி”!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான “தரங்கிணி” (INS Tarangini) எனும் பாய்மரப் பயிற்சி கப்பல் நாளை (27) திருகோணமலை அஷ்ரப் முனையத்தை வந்தடைய உள்ளது. இயந்திரம் மற்றும் எரிவாயு விசையாழியைக் (Gas Turbine) கொண்ட பாய்மரப் பயிற்சி கப்பல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உலக கடற்படைகளிடம் உள்ளன. அந்தவகையில் இந்திய கடற்படை இத்தகைய பாய்மரப் பயிற்சி கப்பலைத் தன்வசம் வைத்திருப்பது கடற்படைத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. […]

உலகம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் பின்தொடர்பவர்கள் : ட்ரம்ப்பை பின் தள்ளிய மோடி!

  • February 26, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  100 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டிய முதல் உலகத் தலைவர் அல்லது அரசியல்வாதியாக மாறியுள்ளார். இது அவரது உலகளாவிய டிஜிட்டல் இருப்பில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது. 2014 இல் மெட்டாவுக்குச் சொந்தமான தளத்தில் இணைந்த பிரதமர் மோடி, இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். ட்ரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ […]

பொழுதுபோக்கு

திருமண பந்தத்தில் இணைந்தது விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி

  • February 26, 2026
  • 0 Comments

நடிகர் விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா மந்தனா Rashmika Mandanna ஆகியோரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் திருமண வைபவங்கள் நடைபெற்று வந்தன. இதில் இருவரது குடும்பத்தினரும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று (26)முற்பகல் 10:10 மணிக்கு இருவரது திருமணமும் நடைபெற்றது. புது மண தம்பதியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தொழிலதிபர் அம்பானி […]

இலங்கை செய்தி

மக்களை கிலிகொள்ள வைத்துள்ள முதலமைகள்!

  • February 26, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த ஓய்ந்திருந்தாலும், கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில் போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களிலேயே இவ்வாறு முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களிலும் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் இடம்பெற்றன. எனவே, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் […]

ஐரோப்பா

முதல் முறையாக தாக்குதல் ட்ரோன்களை இராணுவத்திற்கு வழங்கும் ஜெர்மனி!

  • February 26, 2026
  • 0 Comments

ஜெர்மன் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முறையாக தாக்குதல் ட்ரோன்களை இராணுவத்திற்கு வழங்கும் திட்டங்களை நேற்று ஆதரித்துள்ளனர். இதற்கமைய இரண்டு ஜெர்மன் பாதுகாப்பு தொடக்க நிறுவனங்களான ஹெல்சிங் மற்றும் பெர்லினை தளமாகக் கொண்ட ஸ்டார்க் டிஃபென்ஸ் (Stark Defence) உடன் ஒப்பந்தங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் €536 மில்லியன் (S$800 மில்லியன்) மதிப்புடைய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரஷ்யாவைத் தடுக்கவும் நேட்டோவின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமானது எனக் கூறும் அதிகாரிகள்  2027 ஆம் ஆண்டுக்குள் […]

error: Content is protected !!