இலங்கை

இலங்கை சுகாதார சேவையில் 700 தாதியர்கள் – புதிய சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கை மக்களுக்கு மிகச் சிறப்பாக சுகாதார சேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக துறைசார் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். திசைமுகப்படுத்தல் பயிற்சி நெறிக்காக விஞ்ஞானமானி தாதியர் பட்டதாரிகள் 700 பேரை இணைத்துக் கொள்வது தொடர்பான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தாதியர் சேவையில் கணிசமான வெற்றிடங்கள் உள்ளன. வெற்றிடங்களை நிரப்புவதற்குத் துரிதமாக நியமனங்கள் வழங்கப்படும். சுகாதார […]

இந்தியா

சென்னையில் அடுத்தடுத்து கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு!

  • October 31, 2025
  • 0 Comments

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளன. இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலில் விளையாடச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற மற்ற பெண்களும் பலியாகியுள்ளனர். அவர்களின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோரின் […]

இலங்கை

யாழ் பல்கலை வளாகத்திலிருத்து மீட்கப்பட்ட இரு மெகசின்கள்

  • October 31, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை

பிரித்தானியாவிற்கு சென்றுள்ள இலங்கையின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள்!

  • October 31, 2025
  • 0 Comments

சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான இலங்கை நாடாளுமன்றக் குழு ஒன்று 2025 அக்டோபர் 26 முதல் 29 வரை ஐக்கிய இராச்சியத்திற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டது. பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஜனநாயக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவை இந்த விஜயத்தின் நோக்கமாகக் கூறப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளை (WFD) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச மேம்பாட்டுத் துறை ஆகியவை இந்த விஜயத்திற்குத் தேவையான வசதிகளையும் […]

ஐரோப்பா

ரஷயாவுக்காக உளவு பார்த்த மூவருக்கு தண்டனை வழங்கிய ஜெர்மன் நீதிமன்றம்

  • October 31, 2025
  • 0 Comments

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக மூன்று பேரை மியூனிக்( Munich) உயர் பிராந்திய நீதிமன்றம் நேற்றைய தினம்(30) குற்றவாளிகளாக அறிவித்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த மூவரின் தலைவராகக் கூறப்படும் நபருக்கு நாசவேலைச் செயல்களைத் திட்டமிட்டதற்காகவும், கிழக்கு உக்ரைனில் துணை ராணுவ அதிகாரியாக இருந்ததற்காகவும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது இரண்டு சக குற்றவாளிகளுக்கும் முறையே ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய பிரதிவாதிக்கு எட்டு ஆண்டுகள் மற்றும் எட்டு […]

பொழுதுபோக்கு

“ஜீ தமிழ் சரிகமப” நடுவரை எழுந்து ஓட விட்ட சபேசன்… அட்டகாசமான புரோமோ…

  • October 31, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் சரிகமப வில் இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த சபேசனின் புரோமே வெளியாகி சக்கை போடு போடுகின்றது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கும் எபிசோட்களில் மூன்றாவது பைனலிஸ்ட் தெரிவு செய்யப்பட உள்ளார். அதற்காக சபேசன் உள்ளிட்ட ஐவருக்கு இடையில் போட்டிகள் மும்முரமாக உள்ளன. இதையடுத்து நேற்று மற்றும் இன்று ஒவ்வொருவரின் புரோமோக்கள் வெளிவந்த நிலையில், சபேசனின் புரோமோக்காக இலங்கையர்கள் உட்பட அனைவரும் காத்திருந்தனர். அந்த வகையில் சபேசன் இராவணன் படத்திலிருந்து கார்த்திக் பாடிய உசுரே போகுதே.. உசுரே போகுதே.. என்ற பாடலை பாடினார். ஒரிஜினல் பாடகருக்கு முன்பே சற்றும் பயமில்லாமல் சபேசன் பாடிய பாடலைக்கேட்டு அரங்கமே எழுந்து நின்றது. பாடகர் கார்த்திக் அவரது கதிரையில் இருந்து இறங்கிஓடி வந்து சபேசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், அவருக்கு இன்னொரு ஸ்டார் கொடுத்தார். அடுத்ததாக இருவரும் சேர்ந்து உசுரே போகுது பாடலை அட்டகாசமாக பாடியுள்ளனர். இதோ இந்த புரோமோ…

இலங்கை

“ஜனநாயகத்துக்காக முன்னிலையாவதற்கு பதவிகள் தேவையில்லை”: நாமல் ராஜபக்ச

  • October 31, 2025
  • 0 Comments

ஜனநாயகத்துக்காக முன்னிலையாவதற்கு பதவிகள் தேவையில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (31) தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பயணத்துக்கு எதிராகவே 21 ஆம் திகதி ஒன்றிணையவுள்ளோம்.நல்லாட்சியின்போது எதிரணிக்குரிய பொறுப்பை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 38000 இற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!

  • October 31, 2025
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ‘அவசர வேலை’ திட்டத்தின் கீழ் 38,000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை சராசரியாக ஒவ்வொரு நாளும் 129 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சக தரவு காட்டுகிறது. சிறைச்சாலை நெரிசலை சமாளிக்க அவசர நடவடிக்கையாக, சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான நிலையான கால தண்டனை அனுபவிக்கும் கைதிகள் விடுதலை […]

பொழுதுபோக்கு

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனருக்கு டும்.. டும்.. டும்

  • October 31, 2025
  • 0 Comments

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பாராட்டையும் பெற்றார் அபிஷன். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே, மேடையில் தனது நீண்ட நாள் காதலியான அகிலாவிடம் திருமணம் செய்ய சம்மதமா? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் போர் – புட்டின் மற்றும் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நிறுத்தம்!

  • October 31, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் (Donald Trump) ஆகியோரத்து திட்டமிட்ட சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் புடாபெஸ்டில் (Budapest) சந்திப்பார்கள் என முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது. போர் நிறுத்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக உக்ரைன் கூடுதல் பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மொஸ்கோ வலியுயுறுத்தி வருகிறது. பிராந்திய சலுகைகள், உக்ரைனின் ஆயுதப் படைகளில் கூர்மையான குறைப்பு மற்றும் உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் […]

error: Content is protected !!