ஐரோப்பா

ஈரானிய மாணவியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு!

  • February 26, 2026
  • 0 Comments

சமூக ஊடகப் பதிவுகளில் பயங்கரவாதத்தை ஆதரித்து கருத்து பதிவிட்ட ஈரானிய பிரஜை ஒருவரை குற்றவாளியாக அறிவித்து  பிரான்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதற்கமைய லியோன் நகரில் வசிக்கும் மாணவி மஹ்தியே எஸ்ஃபாண்டியாரிக்கு (Mahdieh Esfandiari) 04 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தண்டனை காலம் முடிந்ததும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மஹ்தியே சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தீர்ப்பை கடுமையாக விமர்சித்ததுடன், மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். குறித்த மாணவி கடந்த 2023 […]

விளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு

  • February 26, 2026
  • 0 Comments

சிம்பாப்வே அணிக்கு 257 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் இன்றைய (26) மற்றுமொரு போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னையில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அபிஷேக் சர்மா 55 […]

உலகம்

கண்துடைப்பான ஒப்பந்தம் : காசாவில் நாளாந்தம் உயிரிழக்கும் மக்கள்!

  • February 26, 2026
  • 0 Comments

காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த பகுதியில் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருவரை கொலை செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் தலைமையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமாதான ஒப்பந்தம் வெறும் கண்துடைப்பான ஒரு ஒப்பந்தமாகவே காணப்படுகிறது. அத்துமீறல், அச்சுறுத்தல் என பல காரணிகளை குறிப்பிட்டு காசா பகுதியில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக ரஃபாவில் உள்ள நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்த அளவிலான […]

இலங்கை செய்தி

மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்

  • February 26, 2026
  • 0 Comments

மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம், மாற்றுச் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி வலிகாமம் பிரதேச சபைக்கு முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்பு நிறத்திலான பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச சபை உறுப்பினர்கள் அமர்வுக்கு செல்ல முன்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா  நிரோஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. .

ஐரோப்பா

UK வரும் சட்டவிரோத புலம்பெயர்வோரிடம் இருந்து பணம் பறித்த குடியேற்ற அதிகாரிகள்!

  • February 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குடியேற்ற அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகளிடம் இருந்து பணியில் இருந்த ஜான் பெர்ன்தால் (John Bernthal), 53, பென் எட்வர்ட்ஸ் (Ben Edwardes) 45, லீ-ஆன் எவன்சன் (Lee-Ann Evanson), 42, பெஸ்மிர் மாடேரா (Besmir Matera) 36, மற்றும் ஜாக் மிட்செல் (Jack Mitchell) 33, ஆகியோர் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது […]

இலங்கை செய்தி

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு

  • February 26, 2026
  • 0 Comments

இந்தியாவில்  கைது செய்யப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த  போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு […]

அரசியல் இலங்கை செய்தி

பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு முதுகெலும்பில்லை: மஹிந்த அணி கொக்கரிப்பு!

  • February 26, 2026
  • 0 Comments

“ உரையாடலில் பங்கேற்று நாமல் ராஜபக்கவிடம் கேள்வி எழுப்புவதற்குரிய முதுகெலும்பு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகளுக்கு இல்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் வீரசேகர முன்வைத்தார். “ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் என்பவற்றிடமிருந்து நாமல் ராஜபக்சவுக்கு […]

ஐரோப்பா

நோர்வே மன்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

  • February 26, 2026
  • 0 Comments

நோர்வே மன்னர் ஹரால்ட் (89) (Harald) ஸ்பெயினில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அங்கிருந்து வெளியேறுவார் என அரச அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் மூத்த அரச தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை டெனெரிஃப் (Tenerife) தீவில் இருந்தபோது காலில் ஏற்பட்ட நோய் தொற்று மற்றும், நீரிழப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ச்சியாக சிகிச்சையில் இருந்த அவர் இன்று வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மீளவும் அரண்மனைக்கு எப்போது திரும்புவார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

இலங்கை செய்தி

யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நியமனம்!

  • February 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி Senior Professor Thirunavukkarasu Velnambi ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மார்ச் 25 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் கிழக்கு, புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, தற்போது யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றி வருகின்றார். கல்வித்துறையிலும் […]

செய்தி தமிழ்நாடு

தவெகவுக்கு அடுத்த இடி:கரூர் தவெக கூட்டத்தில் கொடிக் கம்பம் சாய்ந்ததில் நிர்வாகி காயம் – 02 பிரிவுகளில் வழக்கு

  • February 26, 2026
  • 0 Comments

தவெக கொள்கை விளக்க கூட்டத்தில் கொடிக் கம்பம் சாய்ந்ததில் நிர்வாகி காயமடைந்தார். இது தொடர்பாக தவெக நிர்வாகி மீது இரு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் 80 அடி வீதியில் தவெக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக கரூர் மாநகராட்சியின் அனுமதியின்றி அப்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இரவு உரையாற்றிக் கொண்டிருக்கும்போது மேடைக்கு அருகே […]

error: Content is protected !!