ஆஸ்திரேலியா

கொலையில் முடிந்த சுற்றுலாப் பயணம்!

  • February 27, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் Thailand புகெட் Phuket தீவில் நடந்த மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். வீதியில் நடந்துசெல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தாலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த 58 வயதான ஆஸ்திரேலியரே பிரஜை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்தார். தாக்குதலையடுத்து தப்பியோடிய துருக்கியை சேர்ந்த 29 வயது இளைஞன் தாய்லாந்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பா

ரஷ்ய போர் களத்தில் இரு தென்னாப்பிரிக்க வீரர்கள் உயிரிழப்பு!

  • February 27, 2026
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடிய இரு தென்னாப்பிரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரொனால்ட் லமோலா (Ronald Lamola) உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நபர்கள் போலி வேலைவாய்ப்பு மோசடி மூலம் ரஷ்யாவின் ஆட்சேர்ப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபடுவதற்கு முன்பு பாதுகாப்புப் பயிற்சி அளிப்பதாக பொய்யான வாக்குறுதிகள் அளித்து போர்களத்தில் எவ்வித பயிற்சியும் இன்றி விடப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய தென்னாப்பிரிக்க வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடைவடைக்காக முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவின் […]

இலங்கை செய்தி

மணல் கடத்தல்: உழவு இயந்திரம்மீது STF துப்பாக்கிச்சூடு! சாரதி தப்பியோட்டம்!

  • February 27, 2026
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம்மீது விசேட அதிரடிப்படையினர் STF துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை, விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும், சமிக்கையை மீறி அவை சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட […]

பொழுதுபோக்கு

அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையுமா நியூசிலாந்து?

  • February 27, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (27) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து England மற்றும் நியூசிலாந்து New Zealand ஆகிய அணிகள் மோதுகின்றன. கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo RPS மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இங்கிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ளது. எனவே, இன்றைய போட்டி அவ்வணிக்கு முக்கியத்துவம் இல்லை. எனினும், நியூசிலாந்து அணிக்கு முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு தெரிவாகிவிடும். எனவே, வெற்றி முனைப்போடு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சமூக ஊடகத் தடை : இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிவிப்பு!

  • February 27, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை அறிமுகப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், இன்ஸ்டாகிராம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய டீனேஜர்கள் சமூக ஊடகங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை பார்க்கும்போது அது தொடர்பில் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. “இந்த எச்சரிக்கைகள் இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து டீனேஜர்களைப் பாதுகாக்க உதவும் எங்கள் தற்போதைய வேலையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன,” என்று அந்த தளம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழரசுக் கட்சி முழு ஆதரவு!

  • February 27, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், அதற்கு மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் ITAK கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் M.A. Sumanthiran வலியுறுத்தியுள்ளார். இச்சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த முனைப்புடன் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது நீண்டகாலக் கோரிக்கையாகும். இதனை […]

அரசியல் இலங்கை செய்தி

3 லட்சம் பேரை பணயக் கைதியாக வைத்திருந்தார் பிரபாகரன்: மஹிந்த அணி குற்றச்சாட்டு!

  • February 27, 2026
  • 0 Comments

“பிரபாகரன் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை படையினர் காப்பாற்றினார்கள்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “இலங்கையில் போர் குற்றம், இனப்படுகொலை நடந்தது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு நடக்கவில்லை. பிரபாகரன்தான் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் […]

இலங்கை செய்தி

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்!

  • February 27, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என 500 இற்கும் மேற்பட்டோர் கச்சதீவில் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பக்தர்களின் வருகைக்காகப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், […]

கருத்து & பகுப்பாய்வு

வளர்ச்சி என்ற போர்வையில் சுற்றுச்சூழல் அழிப்பு – யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதானத்துக்கான போராட்டம்

  • February 26, 2026
  • 0 Comments

நமது தேசிய கிரிக்கெட் அணியின் தற்போதைய செயல்திறன் கவலையளிப்பதாக இருந்தபோதிலும், அரசாங்கம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுவதில் முழு உற்சாகத்தை காட்டுவது ஆச்சர்யத்தையும் கவலையையும் உருவாக்குகிறது. விளையாட்டின் முன்னேற்றத்திற்கான நிதியும், திறமையான வீரர்களைப் பயிற்றுவிப்பதற்கான திட்டங்கள் பெரிதும் தேவைப்படும் நிலையில், வளங்களைப் பயன்படுத்துவதில் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் எவ்வாறு நிலைகொண்டுள்ளன என்பது கேள்விக்குறியாகிறது. யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் முன்மொழியப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களின் அழுத்தத்தினால் அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. மண்டைதீவு, பல்லுயிர் […]

இலங்கை

க.பொ.த உயர் தரம் – செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

  • February 26, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய […]

error: Content is protected !!