உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – ஆரஞ்சு எச்சரிக்கை அமுலில்! பலி எண்ணிக்கை உயர்வு!

  • November 3, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின்   மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-i-Sharif) நகரில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று இடம்பெற்றது. இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 320 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் அச்சம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அதன் நிலநடுக்க தாக்க அமைப்பு குறித்து ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

இந்தியா செய்தி

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – 16 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

  • November 3, 2025
  • 0 Comments

இந்தியாவில்  சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று பொதுப் போக்குவரத்துப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெலுக்கான மாநிலத்திற்கு அருகே இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதகாவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 02 இலட்சம் ரூபாய் இழப்பீடு […]

இலங்கை

கெஹெலியவின் சொத்து விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • November 3, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ரிட் மனுக்களை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக்கோரி 03 ரிட் மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று  நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு  முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதி […]

இலங்கை

உலகச் சந்தைக்கு உகந்த அலங்கார மீன்கள்: வடக்கில் அமைச்சர் ஆய்வு

  • November 3, 2025
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள் மற்றும் எதிர்நோக்கிய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கொழும்பு பாதுக்கவில் அமைந்துள்ள ஹரித்த அலங்கார மீன் உற்பத்தி பண்ணைக்கு அமைச்சர் சென்றிருந்தார். அங்கு அலங்கார மீன் உற்பத்தியை பார்வையிட்டதோடு, கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, அலங்கார மீன் உற்பத்தி […]

இலங்கை

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சதான் – ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் அதிரடி அறிவிப்பு!

  • November 3, 2025
  • 0 Comments

நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டு வருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதி என நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது வருமாறு: “கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச களமிறங்கியதால் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி […]

உலகம் செய்தி

பசுபிக் தீவு நாடுகளின் ஆதரவு: ஆஸ்திரேலியாவிற்கு காலநிலை மாநாடு நடத்தும் வாய்ப்பு?

  • November 3, 2025
  • 0 Comments

ஐ.நா. காலநிலை மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு நாடுகளும் ஐ.நாவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு விட்டுக்கொடுக்க மறுக்கும் பட்சத்தில் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு ஜேர்மனி கைகளுக்குள் சென்றுவிடும். இந்நிலையில் இது விடயத்தில் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் துருக்கி ஜனாதிபதிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடிதம் எழுதியுள்ளார். 18 நாடுகளைக் கொண்ட பசிபிக் தீவு […]

உலகம் செய்தி

தென் சீனக் கடலில் பதற்றம் – சீனாவின் நடவடிக்கைகளுக்கு பென்டகன் தலைவர் கண்டனம்

  • November 3, 2025
  • 0 Comments

தென் சீனக் கடலில் சீனாவின் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகப் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் குற்றம் சாட்டினார். மேலும், சீன அச்சுறுத்தல்களுக்குக் கூட்டாகப் பதிலளிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தொழில்நுட்பம் மூலம் ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் பலதரப்புப் பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கிய கோலாலம்பூரில் நடந்த இரண்டாவது நாள் கூட்டங்களில், ஆசியான் (ASEAN) பாதுகாப்பு அமைச்சர்களுக்கு பகிரப்பட்ட கடல்சார் கள விழிப்புணர்வை உருவாக்க ஹெக்செத் முன்மொழிந்தார். சீனா மற்ற […]

உலகம்

ஆஸ்திரேலியா தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! வேகமாக ஏற்படும் மாற்றம்

  • November 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா (Australia) அதன் எல்லைக் கோட்டிலிருந்து படிப்படியாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். புதிய ஆய்வுகளுக்கு அமைய, மணிக்கு சுமார் 7 சென்டிமீட்டர் வேகத்தில் வடக்குப் பகுதியை நோக்கி ஆஸ்திரேலியா நகர்ந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது எதிர்காலத்தில் ஒரு பெரிய நிலவியல் மோதலுக்கு வழிவகுக்கும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவிலிருந்து பிரிந்த ஆஸ்திரேலியா, இப்போது உலகின் அதிவேகமாக நகரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நகர்வு […]

உலகம்

ஆப்கானிஸ்தானை மீண்டும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி – 150 பேர் காயம்

  • November 3, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-i-Sharif) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 150 பேர் காயமடைந்தனர். அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ப்ளூ மசூதிக்கு (Blue Mosque) கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த இடம் இஸ்லாத்தின் நான்காவது கலீபாவும், நபிகள் நாயகத்தின் மருமகனுமான ஹஸ்ரத் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு வருகை தரும் வத்திக்கான் செயலர் – இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புகள்

  • November 3, 2025
  • 0 Comments

இலங்கைக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். முக்கிய […]

error: Content is protected !!