ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துமாறு லிபரல் அரசாங்கத்திடம் கோரிக்கை

  • March 3, 2026
  • 0 Comments

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக கவனம் செலுத்துமாறு லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் துணைத் தலைவர் டெய்ஸி கூப்பர் (Daisy Cooper), ஐரோப்பாவுடன் சிறந்த வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதில் அரசு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் இடையே புதிய சுங்க ஒன்றியத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கும் நோக்கத்தை அரசு அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வசந்த கால பொருளாதார அறிக்கை வெளியீடு

  • March 3, 2026
  • 0 Comments

அரசாங்கம் நாட்டிற்கான சரியான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளது என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார் வசந்த கால அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நிச்சயமற்ற உலக சூழ்நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ளோம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிக்கையில் 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சற்று மெதுவாக வளர்ச்சியடையும் என்றும் 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வசந்த கால […]

இலங்கை செய்தி

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சி

  • March 3, 2026
  • 0 Comments

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் ஆயிரத்து 290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,443.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய மொத்தப் புரள்வு 9.56 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு – என்ன காரணம் தெரியுமா?

  • March 3, 2026
  • 0 Comments

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழகில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்கும் இடையூறுகளை தடுப்பதற்காகவும் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தூதரகங்கள், […]

இலங்கை செய்தி

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

  • March 3, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்க பவுணொன்று 4 லட்சத்து 25, ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம பவுண் ஒன்று 3 லட்சத்து 93 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 53,125 ரூபாவுக்கும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் போர் நடவடிக்கை தீவிரமடைந்தால் பிரித்தானியாவுக்கு பெரும் சவால்

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், அது பிரித்தானியாவுக்கு புதிய பாதுகாப்பு சவால்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சைப்ரஸில் அமைந்துள்ள பிரித்தானிய ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி (Akrotiri) அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இந்தநிலையில் மத்திய கிழக்கில் பிரித்தானிய படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கட்டாருக்கு டைபூன் (Typhoon) போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரியிலிருந்து ஆறு F-35 போர் விமானங்களும் […]

இலங்கை செய்தி

தமிழர் பிரச்சினை குறித்து கேட்டறிந்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்

  • March 3, 2026
  • 0 Comments

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்குக்கும் Andreas Gravik, இலங்கை தமிழரசுக் கட்சி ITAK உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் M.A. Sumanthiran, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் Chanakyan ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. போருக்குப் […]

இலங்கை

முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

  • March 3, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார். கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர், சட்டத்துறையிலும் சமூக மட்டத்திலும் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

உலகம்

ஈரானின் குடியிருப்புகள் மீது ஏவுகணை வீச்சு: 5 பேர் பலி

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் ஹமதான் மாகாணத்தில் உள்ள மக்கள்செறிந்து வாழும் குடியிருப்புகள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமதான் பகுதியில் உள்ள இரண்டு அவசர சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்களில் பல மருத்துவத் தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் […]

அரசியல் இலங்கை செய்தி

ஈரான்மீதான தாக்குதல் ஐ.நா. சாசனத்தை மீறும் செயல்: சபையில் சஜித் கண்டனம்!

  • March 3, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதலானது ஐ.நா. சாசனத்தைமீறும் செயலாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவர் Opposition Leader சஜித் பிரேமதாச Sajith Premadasa. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அதேபோல ஐக்கிய அரபு அமீகரம், சவூதி, கட்டார் உள்ளிட்ட நாடுகள்மீது ஈரான் நடத்திய தாக்குதலையும் கண்டிக்கின்றோம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் எமது நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட […]

error: Content is protected !!