உலகம் செய்தி

இருண்ட இடத்தில் அமெரிக்கா – சாடும் ஒபாமா!

  • November 2, 2025
  • 0 Comments

“நமது நாடும் நமது கொள்கையும் இப்போது மிகவும் இருண்ட இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். வர்ஜீனியா (Virginia) மற்றும் நியூ ஜெர்சி (New Jersey) ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர் வேட்பாளர் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எங்கிருந்து தொடங்குவது என்று தெரிந்து கொள்வது கடினம். ஏனென்றால் வெள்ளை மாளிகையானது ஒவ்வொரு நாளும்  பொறுப்பற்ற முறையில் […]

உலகம் செய்தி

மெக்சிகோவில் (Mexico) தீ விபத்து – குழந்தைகள் உள்பட 23 பேர் பலி!

  • November 2, 2025
  • 0 Comments

மெக்சிகோவில் (Mexico)கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோனோரா (Sonora)  மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ (Hermosillo) நகர மையத்தில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் (Hermosillo) உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளில் “நச்சு வாயுக்களை உள்ளிழுத்ததால்”  இறப்புகள் ஏற்பட்டதாக  ஆளுனர் சலாஸ் சாவேஸ் (Salas Chávez) கூறியுள்ளார். தீ விபத்து […]

இலங்கை செய்தி

சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்!!

  • November 2, 2025
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாதது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார். 2026 சீர்திருத்தங்களுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா மற்றும் ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றபோது, ​​கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து […]

பொழுதுபோக்கு

‘கும்கி 2’ முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது

  • November 2, 2025
  • 0 Comments

பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘கும்கி 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொத்தி பொத்தி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அவரே பாடியுள்ளார். மோகன் ராஜ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மதி, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதேவேளை, இம்ான் இசையில் வெளிவந்த கும்கி 1 திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் ரீச்சாகி உள்ளது. அதேபோல் கும்கி 2 பாடலும் […]

விளையாட்டு

கோப்பை யாருக்கு? மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று

  • November 2, 2025
  • 0 Comments

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த முறை, இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இத்தொடரில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே […]

உலகம்

இந்திய விமான நிலையத்தில் பயணிகள் பையில் சிக்கிய குரங்குகள்

  • November 2, 2025
  • 0 Comments

இந்திய விமான நிலையம் ஒன்றில் பயணியின் பையில் அரிய வகைக் குரங்குகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அந்தப் பயணி மும்பை விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து தாய்லாந்து வழியாக இந்தியா சென்ற பயணியிடம் சுங்க அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது பயணப் பையிலிருந்து குரங்குகளைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது இரண்டு குரங்குகளில் ஒன்று உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. விலங்குகளை நாட்டுக்கு நாடு கடத்தும் கும்பல் ஒன்றினால் குரங்குகள் தன்னிடம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேக நபரான பயணி தெரிவித்துள்ளார். […]

இலங்கை

முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அழைப்பு – தேசிய மக்கள் சக்தியின் நுகேகொடை கூட்டத்தில் எதிர்பார்ப்பு

  • November 2, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கூட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு களமிறங்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் பங்கேற்றாலும், அக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தச் சூழ்நிலையிலேயே, […]

வாழ்வியல்

பார்வைக்கு அச்சுறுத்தலாகும் உயர் இரத்த அழுத்தம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

  • November 2, 2025
  • 0 Comments

உலக மக்களை அச்சுறுத்தும் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) மனிதனின் பார்வைத் திறனைப் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் (Hypertensive Retinopathy) எனப்படும் ஒரு நிலைமையே கண்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது, மூளைக்கு ஒளி சமிக்ஞைகளை அனுப்ப உதவும் கண்ணின் பகுதியான விழித்திரையைச் சேதப்படுத்துகிறது. இரத்த அழுத்தம் சடுதியாக மிக அதிகமாக இருக்கும்போது, அது விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்களைச் சேதப்படுத்தும். பின்னர் […]

இலங்கை

போராட்டம் குறித்த அச்சத்தில் அரசாங்கம்! ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தகவல்

  • November 2, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டார். “21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தால் ஆளுங்கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து விடயங்களையும் மறந்து அப்போராட்டம் பற்றிப் பேசுகின்றது. எதிரணியிலுள்ள சில கட்சிகள் எதிரணியையே தாக்குகின்றன. அக்கட்சிகளுடன் எமக்கு தேர்தல் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நடந்த பயங்கரம் – தொடரூந்தில் பயணிகள் மீது தாக்குதல் – 9 பேர் ஆபத்தான நிலையில் (update)

  • November 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடரூந்தில் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். […]

error: Content is protected !!