இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தகத்திற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் – நிமல் சிறிபால டி சில்வா உறுதி!

ஹம்பாந்தோட்டை துறைமுகம்  குறித்து சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தெளிவான வர்த்தக நடைமுறைகளைக் கொண்டது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

World Is One News (WION) உடன் பேசிய அவர், குறித்த துறைமுகம் வர்த்தக நோக்கங்களுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

குறித்த செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க வேண்டியிருந்தது. இது குறித்து இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

இறுதியாக சீனா அதனை கைப்பற்றியது. இது தனியார் துறை கையகப்படுத்தல் ஆகும்.  இது வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.

சீனர்களுடனான எங்களின் ஒப்பந்தம், வர்த்தகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். தவிர, எந்தவொரு போருக்கோ அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!