200 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்படும் தங்கக் கழுகுகள்!
கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தங்கக் கழுகுகள் மீள்வருகையை மேற்கொள்ளவுள்ளன.
இந்நிலையில் குறித்த பறவையை பிரித்தானிய வனவிலங்குகளில் அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய சுமார் 01 மில்லியன் நிதியை அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவியானது, கடந்த வாரம் சுற்றுச்சூழல் துறையால் அறிவிக்கப்பட்ட £60 மில்லியன் இனங்கள் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஒரு காலத்தில் இங்கிலாந்து முழுவதும் சாதாரணமாகக் காணப்பட்ட இந்த பறவை, விக்டோரியன் செம்மறி ஆடு உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
உச்ச வேட்டையாடிகளாக, அவை சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் இருந்தபோதிலும், கடந்த 150 ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஒரு சில ஜோடிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.




