ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் திடீரென எழுந்த ராட்சத அலைகள் – 6 பேர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சில அலைகள் 3.5 மீட்டர் வரை உயர்ந்ததாகத் தெரிகிறது. வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்தனர்.

நேற்று சிட்னி நகருக்கு அருகே மீன்பிடிக்கச் சென்ற இருவர் அலையில் சிக்கினர். அவர்களில் ஒருவர் மட்டுமே பிழைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

வெள்ளிக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மூவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மெல்பர்னில் கடலுக்குள் இழுக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அலைகளில் சிக்கிய மேலும் இருவரைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருவரையும் வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!