அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட துர்நாற்றம் – அவசரமாக தரையிறக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து புறப்பட்ட எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வடக்குப் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பரிசில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் Seattle நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எயார் பிரான்சுக்கு சொந்தமான Boeing 787 விமானம், கனடாவின் வடக்குப் பகுதியான Iqaluit நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விமானம் உள்ளூர் நேரம் காலை 10:44 மணிக்கு தரையிடப்பட்டது. விமானத்தில் இருந்து உருகும் துர்நாற்றம் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப பரிசோதனைகளுக்காக விமானம், தொடர்ந்தும் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)