இலங்கை

இலங்கை பிரஜை உள்ளிட்ட நால்வர் இந்தியாவில் கைது!

ஒருகோடி ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொலிஸ் அதிகாரிகள் வேன் ஒன்றுக்குள் இருந்த குறித்த நால்வரை விசாரணை செய்தபோது குறித்த நால்வரையும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது குறித்த வேனை சோதனை செய்த பொலிஸார் சட்டவிரோத பணம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடிரூபாய் இந்திய பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து கைது செய்யப்பட்ட நால்வரிடமும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!