இலங்கை செய்தி

கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அபாயம்!! அவசர எச்சரிக்கை விடுப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளதால், மீட்புக் குழுக்களை உடனடி நடவடிக்கைக்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாவட்ட செயலாளரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (01) பகல் முழுவதும் பெய்து வரும் மழையினால் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளிலும், குறிப்பாக கம்பஹா நகரை அண்டிய பகுதிகளிலும், வத்தளை மற்றும் ஜாஎல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்.

மேலும் அத்தனகலு ஓயாவின் இருபுறங்களிலும் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை