இந்தியா

இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்; சந்தேக நபர் கைது

அண்மையில் இந்தியாவின் பல விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

அதன் தொடர்பில் தலைநகர் டெல்லியைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவர் சனிக்கிழமையன்று (அக்டோபர் 26) கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர். ‌ஷுபம் உபத்யய் என்ற அந்த நபர், வேலை இல்லாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர்தான் பல விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சென்ற வாரம், நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் தொடர்பில் 17 வயதான அந்த சந்தேக நபரை மும்பை நகரக் காவல்துறையினர் கைது செய்தனர். இம்மாதம் 14ஆம் திகதி முதல் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

12ஆம் நிலை மாணவரான அந்த 17 வயது நபர், சமுக ஊடகப் பதிவுகள் மூலம் டெல்லி செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிறகு போலி வெடிகுண்டு மிரட்டல்களைப் பற்றித் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்து உபத்யயும் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

(Visited 33 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!