கலிபோர்னியாவில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு!
தெற்கு கலிபோர்னியாவில் ‘ஸ்பிரிங்ஸ் ஃபயர்’ ( Springs Fire) எனப் பெயரிடப்பட்ட, வேகமாகப் பரவும் காட்டுத்தீ ஒன்று பரவி வருகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குறித்த தீப் பரவலானது சுமார் 5.47 சதுர மைல்கள் (14.17 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவிற்கு விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தீப் பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று நிலைமையை கணிசமாகப் பாதித்து, அப்பகுதி முழுவதும் புகையைப் பரப்பி, தீயணைப்பு நடவடிக்கைகளைச் சிக்கலாக்குகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





