நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு : பாடசாலைகளுக்கு விடுமுறை!
பனிப்புயல் எச்சரிக்கை அமுலில் உள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) நேற்று அவசரக்கால நிலையை அறிவித்தார்.
இதன்படி நேற்று முதல் இன்று மதியம் வரை நியூயார்க் நகர வீதிகளில் அத்தியாவசியமற்ற வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
தெருக்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழக்கமான போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
நியூயார்கின் தேசிய வானிலை சேவை 17 முதல் 24 அங்குல பனிப்பொழிவு பதிவாகும் என்றும், 60 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





