இஸ்லாமியர்களின் புனித பெருநாள் – மலேசியர்களுக்கு எச்சரிக்கை!
உலகளாவிய ரீதியில் இஸ்லாமியர்களின் புனித காலமாக ரமலான் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மலேசியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோன்பு திறக்கும் இந்த காலப்பகுதியில் சந்தைகளில் கூட்டங்கள் அதிகரிப்பதால் காச நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8 முதல் 14 வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 596 புதிய காசநோய் வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமீபத்திய கண்டுபிடிப்புகள் நாடு முழுவதும் காசநோய் நோயாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 3,161 ஆகக் கொண்டு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“ரமலான் மாதம் காசநோய் பரவுவதற்கு ஒரு காரணமல்ல. இருப்பினும் இந்த மாதத்தில் சமூக தொடர்புகள் அதிகரிப்பது நோய்பரவலை அதிகரிப்பதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




