மனிதர்களை மீளவும் சந்திரனுக்கு அனுப்பும் முயற்சி – ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தி!
வரும் மார்ச் மாதத்தில் மனிதர்களை மீளவும் சந்திரனுக்கு அனுப்ப நாசா இலக்கு வைத்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரனுக்கு அனுப்படும் குழுவினரை குறிக்கிறது.
ஆர்ட்டெமிஸ் II என்ற விண்கலத்தில் சந்திரனின் மறுபக்கத்தை பார்க்க பயணிக்கும் குறித்த குழுவினர் 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்புவார்கள்.
ஆடை ஒத்திகைக்குப் பிறகு ராக்கெட் எரிபொருளால் நிரப்பப்பட்டு கவுண்டவுன் வரிசைக்கு செல்லும் முக்கியமான சோதனை நடவடிக்கையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 6 (இங்கிலாந்தில் மார்ச் 7 ஆம் திகதியின் தொடக்கத்தில்) ஆம் திகதி ஏவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இந்த ஏவுகணை ஏவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




