இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்: மைத்திரிபாலவிடம் இருந்து வாக்குமூலம் பதிவு

சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறினார்.

கண்டியில் அவர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தார்.

கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில் தெரிவித்திருந்தமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!