இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஈஸ்டர் தாக்குதல் – இலங்கையில் கைது செய்யப்படவுள்ள 2 பிரபலங்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய, முன்னாள் பாதுகாப்புத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த காலங்களில் சனல் 4 தொலைக்காட்சியில் அம்பலப்படுத்திய ஹன்சீர் ஆசாத் மௌலானாவிடம் அது தொடர்பாக ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய, இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சனல் 4 காணொளி தொடர்பாக, கடந்த அரசாங்கம் முன்னாள் நீதிபதி இமாம் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்து விசேட அறிக்கையொன்றையும் வழங்கியுள்ளது.

ஆனால் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்குமாறு ஆசாத் மௌலானா கோரப்பட்டிருந்ததுடன், தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 50 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை