ஆசியா

தாய்வானை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்

தாய்வானின் தலைநகரான தைப்பேயில் இன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முதலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தைவானை உலுக்கியது. அரை மணி நேரத்திற்குப் பின்னர் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்திலும் இரண்டாவது நிலநடுக்கம் சுமார் 19 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தாய்வானின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

இதுவரை உயிருடற்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இம்மாதம் (3 ஏப்ரல்) ஹுவாலியென் நகரை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. அதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 3ஆம் திகதியிலிருந்து இதுவரை தாய்வானில் 1,000க்கும் அதிகமான பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!