ஜீரண கோளாறு – சித்த மருத்துவத்தில் தீர்வு

நம் உண்ணும் உணவு உடனடியாக செரிமானம் ஆக வேண்டும். நாம் உண்ணும் உணவை உடல் உறிஞ்சக்கூடிய சிறிய கூறுகளாக உடைக்கும் செயல்முறையாகும்.
இந்த செயல்முறை வாய், வயிறு, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட செரிமான மண்டலத்தில் நடைபெறுகிறது. அவ்வாறு செரிமானம் ஆகவில்லை என்றால் அதனை அஜீரணம் என்று சொல்வார்கள். அஜீரண கோளாறு ஏற்படும்போடு உடல் பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.
உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால், வயிற்று வலி அல்லது அசௌகரியம், நெஞ்செரிச்சல், வாய் புளித்தல், குமட்டல் அல்லது வாந்தி, வயிற்று உப்புசம், அடிக்கடி ஏப்பம் வருவது, பசியின்மை, வாயுத்தொல்லை உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும்.
அதிக காரமான, புளிப்பான அல்லது மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள். அளவுக்கு அதிகமாக அல்லது மிக வேகமாக சாப்பிடுவது. சரியான நேரத்தில் சாப்பிடாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த அஜீரண கோளாறு ஏற்படலாம்.
இந்த அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லையை சரி செய்ய சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை தான் வாய்விளங்கம். பார்ப்பதற்கு மிளகு போலவே இருக்கும் இந்த மூலிகை உடலில் இருக்கும் வாயுக்களை நீக்கும். கிருமிகளை நீக்கும் பண்பு இந்த வாய்விளங்கத்திற்கு உண்டு. வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும். செரிமானத்தை மேம்படுத்துதல், உடல் பருமனை கட்டுப்படுத்துதல், சரும நோய்களுக்கு சிகிச்சையளித்தல், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை இந்த வாய்விளங்கம் கொடுக்கும்.