சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/New-Project-2023-10-28T165652.720-1280x700.webp)
நேற்று (27) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்திய பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)