இலங்கை

இலங்கை விமான நிலையங்களில் அரசியல்வாதிகளின் சலுகைகள் நீக்குமாறு கோரிக்கை

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இது களவு மற்றும் மோசடிக்கு சமமானதாகும்.

அலி சப்ரி ரஹீமின்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதற்கு நான் ஆதரவளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண பயணிகள் முனையம் வழியாக வந்து சாதாரண பயணிகளைப் போல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வாறான சலுகைகள் தேவையில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!