இரட்டை கொலை – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு அம்பாறை நீதவான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2015 ஏப்ரல் 14 ஆம் திகதி பதியதலாவ கெஹெலுல்ல பகுதியில் இரண்டு நபர்கள் அடித்துக் கொல்லப்பட்டு லொறியால் மோதி விபத்து ஏற்பட்டதுபோல் காண்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் சாட்சியங்களை ஆய்வு செய்த பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
(Visited 4 times, 4 visits today)




