ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு நெருக்கடி – குடியேற்ற சட்டத்தை கடுமையாக்க கோரிக்கை

கனடா போன்று ஜெர்மனியிலும் கட்டுக்கடங்காத வகையில் அகதிகள் உள்நுழைந்துள்ளமையால் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இதனால் ஜெர்மனியில் நடைமுறையிலுள்ள குடியேற்ற சட்டத்தை மாற்றியமைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு அகதிகளின் வன்முறை சம்பவங்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனிய மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளதுடன், வெளிநாட்டு அகதிகளை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டு அகதிகளை நாட்டுக்குள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் தற்போது நடைமுறையிலுள்ள 16ஏ சட்டத்திற்கு அமைய எந்தவொரு வெளிநாட்டவரும் ஆபத்து என அடைக்கலம் கோரினால் புகலிடம் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

அரசாங்கத்தின் குடியேற்ற கொள்கையை சாதகமாக பயன்படுத்தும் பல வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் புகுந்து புகலிடம் கோருகின்றனர்.

(Visited 39 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்