இந்தியா

இந்தியாவில் செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்பு முறை வெற்றி

மேகங்கள் மீது ரசாயணங்களை தூவி IITகான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயற்கை மழையை உருவாக்கி உள்ளனர். 6 ஆண்டுகள் தீவிரமான முயற்சிக்கு பின் இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதற்காக IITகான்பூரின் விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட செஸ்னா விமானம் 5ஆயிரம் அடி உயரத்திற்கு சென்று ரசாயன பொடியை மேகங்கள் மீது தூவியது. சிறிது தேரத்திற்கு பின்னர் அந்த பகுதிகளில் மழைப்பொலிவு காணப்பட்டது.

சில்வர் ஐயோடைட், பொட்டாஷியம் ஐயோடைட் போன்ற ரசாயனங்கள் பேகத்தின் மீது தூவப்படும் போது மேகத்தில் அதீத குளிர்ச்சி உண்டாகி மழைப்பொழிவு ஏற்படுகிறது.

இதில் ரசாயணங்கள் தூவப்படும் அளவை பொறுத்தும் காற்றின் வேகத்தை பொறுத்தும் மழை அளவு தீர்மானிக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை சீனா ஏற்கனவே உருவாக்கி விட்டது. ஆனால் அதை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளாத்தால், மைக விதைப்பு முறை குறித்த ஆராய்ச்சி பொறுப்பை IITகான்பூர் விஞ்ஞானிகள் ஏற்று தற்போது வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!