உலகம்

காலநிலை மாற்றம் : கேள்விக்குள்ளாகும் கடல் உயிரினங்களின் இருப்பு!

காலநிலை மாற்றத்தின் காரணமாக வரும் காலங்களில் பென்குயின்கள் அழியும் நிலை ஏற்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்நிலை அபாயகரமான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையால் கிரில் (krill ) எனப்படும் சிறு கடல் உயிரினங்களின் இருப்பு குறைந்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, புதிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பென்குயின்களைப்போல் அண்டார்டிக் உரோமக் கடல் நாய்களின் நிலையும் அக்கறை’ நிலையிலிருந்து ‘அபாயகரமான’ நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் கடல் நாயின் நிலை ‘குறைந்த அக்கறை’ நிலையிலிருந்து ‘பாதிக்கப்படக்கூடிய’ நிலைக்கு மாறியுள்ளது.

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) பாதுகாப்பு மதிப்பீடுகள், இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வியத்தகு சரிவை எடுத்துக்காட்டுகின்றன.

இது, புவியை வெப்பமாக்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!