இலங்கை செய்தி

மட்டக்களப்பில் ஆரம்பமான மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் பிரதான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படும் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதானத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தின் உறுப்பினர் நிதர்சன்,ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதலாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த சிரமதானப்பணியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உறுப்பினர் நிதர்சன் தெரிவித்தார்.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை