பூமியை நோக்கி வரும் சிட்டி கில்லர் விண்கல் : நிலவை அழிக்க வாய்ப்பு!

பூமியை நோக்கி வரும் விண்கல் ஒன்று பூமியை தாக்காது என்றபோதிலும் நிலவினை அழிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘2024 YR4’. ‘சிட்டி கில்லர்’ என்று அழைக்கப்படும் குறித்த விண்கல்லானது கடந்த ஆண்டின் இறுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த கல்லானது குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை நோக்கி வரும். திரும்பி போகும்போது பூமிக்கு நெருக்கமாக செல்லும். அப்படி போகும்போதுதான் இந்த கல் விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டது.
தற்போதைக்கு பூமியை தாக்காது என்றபோதிலும் இது நிலவை தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் இதனால் புவியிற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக கூறுகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)