இலங்கை

இலங்கையில் பால் தேநீரின் விலையில் மாற்றம்!

இலங்கையில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டதன் நன்மையை கருத்திற் கொண்டு ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தற்போது பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறைக்கப்பட்ட விலையில் உணவகங்களுக்கு பால் மா கிடைக்கப்பெற்றதன் பின்னர், வாடிக்கையாளர்களுக்கு அதன் நன்மையை பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

ஆகையால், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவிற்குட்பட்ட விலையில் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!