இலங்கை

வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமையை கவனமாக ஆராய்ந்த பிறகே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கிய சியம்பலாபிட்டிய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சுமார் 75-80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையிலிருந்தும், மத்திய வங்கியிடமிருந்தும் எரிபொருள் கொள்வனவு செய்ததாலும், முதலீடு செய்யும் தரப்பினர் அதிகளவில் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்ததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் வாகன இறக்குமதி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,   எரிபொருள் கொள்வனவுகளுக்காக சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை கூட அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆகவே  இந்த தருணத்தில் வாகனங்களை இறக்குமதிய செய்ய அனுமதி வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 14 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content