இலங்கை செய்தி

சிறுமிக்கு எமனாக வந்த எரிபொருள் பவுசர்

அனுராதபுரம், தலாவ நகரில் எரிபொருள் போக்குவரத்து பவுசர் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலாவ கரகஹவ பிரதேசத்தில் வசித்து வந்த பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (10ஆம் திகதி) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சிறுமி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருந்த மாணவி என தெரியவந்துள்ளது.

கொழும்பு சபுகஸ்கந்த பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று தலாவ நகர சுற்றுவட்டத்தில் தெற்கிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த சிறுமியும் அவரது தாயாரும் இருந்தனர். வித்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பவுசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!