இந்தியா செய்தி

டெல்லியில் இரண்டு வைத்தியசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

டெல்லியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு இன்று (12) பிற்பகல் மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அதிகாரிகள் இரு இடங்களிலும் பல வெடிகுண்டு செயலிழப்பு குழுக்களை குவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் 3.15 மணியளவில், டெல்லியில் உள்ள புராரி மருத்துவமனை முதலில் மின்னஞ்சல் குறித்து புகார் அளித்தது, மாலை 4.26 மணியளவில், டெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை கேள்விக்குரிய மின்னஞ்சல் குறித்து புகார் அளித்தது.

சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளால் இதுவரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது உபகரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் (வடக்கு) மனோஜ் மீனா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற சம்பவம் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் இடம்பெற்றிருந்ததுடன்,  வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக 130 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!